biden and kim
செய்திகள்உலகம்

வடகொரிய அதிகாரிகளைச் சீண்டிய அமெரிக்கா: கடும் சீற்றத்தில் வடகொரியா

Share

அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஏவுகணைச் சோதனையை நடாத்தியமை தொடர்பில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள வடகொரியா, அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.

இதனைப் பின்னணியாக க் க கொண்டு அமெரிக்க நிர்வாகம் வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...