வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் புலம் பெயரும் திட்டத்தை நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் இந்தக் கட்டுப்பாடற்ற நிலைமைக்குக் காரணம், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் எல்லையைக் கட்டுப்பாடின்றி திறந்துவிட்டதே என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் தடைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.