201812300639058635 US winter storms kill seven Media SECVPF
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் அவசரகால நிலை பிரகடனம்!!

Share

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி அகற்றும் வாகனங்கள் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிந்ததுசேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பல பகுதிகளில் வாகனங்கள் பனி மூடி காணப்பட்டுள்ளன.

லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு பெண் பனியில் உறைந்த நிலையில் தனது காரில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் பிரயாணங்களை தவிர்க்குமாறும் மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மன்ஹாட்டன் வடக்கே தீவுப் பகுதியில் 25 சென்டி மீட்டர் அளவிற்கு பனி உயர்ந்துள்ளது. ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் தண்டவாளத்திலிருந்து பனியை அகற்றும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...