இலங்கை அமெரிக்கா
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேசுங்கள்! – இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை

Share

இலங்கையில் நின்று, நிலைத்து நீடிக்க கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

”சகலரையும் ஒன்றிணைத்து, நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக நிறுவனங்களுடனும் ஈடுபட்டு செயற்படுமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம்”

– என்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் முக்கியமான பல மனித உரிமைகள் வழக்குகள் பின்னடைவு கண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, மிக முக்கியமான மனித உரிமை மீறல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள், பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் இந்த உரையில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிவில் சமூக தரப்புகள் கடும் கண்காணிப்புக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்தும், சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...