New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

Share

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப் பகுதி தற்போது மிகத் துரித கதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய கடும் மழை மற்றும் காற்று காரணமாகக் குளங்கள் மற்றும் கடலின் நீர்மட்டம் வழமையை விட அதிகரித்தது.

நீர்மட்டம் உயர்வடைந்ததால், நந்திக்கடல் மற்றும் கடலை இணைக்கும் வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து, போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் தற்காலிகப் பாதையின் மூலம் போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

தற்போது பாலத்தின் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இரவு பகலாகத் துரித கதியில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு – பரந்தன் ஏ35 பிரதான வீதியில் அமைந்துள்ள இந்தப் பாலம், மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாகும். இதன் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால், பயணிகள் மற்றும் கனரக வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி மீண்டும் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...