யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவிகள் இருவரும் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews