களனி ஆற்றில் இனந்தெரியாத சடலம்!!!

Death Body 02

களனி ஆற்றில் இனங்காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

உயிரிழந்தவர் 5 அடி 5 அங்குல உயரம் மற்றும் கறுப்பு காற்சட்டை மற்றும் டி-சேர்ட் அணிந்திருந்தார். இதேவேளை சடலம் தெரணியாகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யட்டியாந்தோட்டை பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNEws

 

 

Exit mobile version