7 24 scaled
இந்தியாசெய்திகள்

உதயநிதி துணை முதலமைச்சரானால் மிகப்பெரிய ஆபத்து: ஹெச்.ராஜா கருத்து

Share

உதயநிதி துணை முதலமைச்சரானால் மிகப்பெரிய ஆபத்து: ஹெச்.ராஜா கருத்து

உதயநிதி துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக மாவட்டமான அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சனாதனம் என்ன என்பதை உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

சனாதனத்தில் உள்ள உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவை தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. சனாதனத்தின் மீதான எதிர்ப்பு 180 ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளது.

சனாதனத்தில் கூறியுள்ளது போல கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

அவர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை அவசரமாக பொலிஸ் சுட்டுக்கொன்றது ஏன்?

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...