large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

Share

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து வியட்நாமில் கல்மேகி புயல் ஏற்படுத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததன்படி, இந்தப் புயல் சுமார் 200 பேரைப் பலியெடுத்திருக்கிறது.

கல்மேகி புயல், பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் மிக மோசமான அனர்த்தமாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (நவ 6) 114 ஆக இருந்த பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 188 ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த அனர்த்தத்தில் 135 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (நவம்பர் 5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியைக் கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. வீதியோர வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனர்த்தத்தால் தாக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கியுள்ளது. இதனால் வியட்நாமிலும் சூறாவளி, பலத்த மழை, வெள்ளம் பாரியளவில் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இன்றிரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாகத் தாக்கக்கூடும் எனவும், இதனால் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...