articles2F2sWN4GIo004Rm34vnB0h
செய்திகள்அரசியல்இலங்கை

தரமற்ற தடுப்பூசிகளால் இருவர் பலி – சஜித் பிரேமதாச அம்பலம்!

Share

குமட்டல் மற்றும் வாந்திக்காக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நச்சுத்தன்மை அடைந்ததால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் திரும்பப் பெறல்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 2,70,000 இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.

இந்தத் தடுப்பூசிகள் அவசரக் கொள்வனவு மூலம் பெறப்பட்டவையா? தரப் பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டனவா? அதன் முடிவுகள் என்ன? என்பது குறித்து அரசாங்கம் நாட்டுக்கு உண்மையை விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வசதிகள் இலங்கையில் உள்ளனவா என்பதையும், கடந்த வரவு செலவுத் திட்டங்களில் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் நிலை என்ன என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.

தரமற்ற மருந்து மாபியாக்களுக்கு எதிராகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் தனது பொறுப்பிலிருந்து விலகிச் செயற்பட முடியாது எனவும் எச்சரித்தார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவை சேனக பிபிலே மருந்துக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் சுகாதார உரிமையைப் பாதுகாக்கத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...