1562298412 Four arrested for assaulting traffic cops at Batticaloa L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அட்டகாசம்: புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு சி.ஐ.டி அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

Share

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில், தவறவிட்ட கமரா பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) அதிகாரிகள் இருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் குழுவினர், தவறுதலாகத் தமது பெறுமதியான கமரா மற்றும் உபகரணங்கள் அடங்கிய தோல்பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் இரவு 8 மணியளவில் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று டார்ச் லைட் (Torch Light) வெளிச்சத்தில் பையைத் தேடியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மீது எதிர்பாராதவிதமாக டார்ச் லைட் வெளிச்சம் பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், “நாங்கள் சி.ஐ.டி அதிகாரிகள், ஏன் எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சினாய்?” எனக் கேட்டுத் தர்க்கத்தில் ஈடுபட்டு, புகைப்படக் கலைஞர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த புகைப்பட நிறுவன உரிமையாளர் மற்றும் ஏனைய கலைஞர்கள் மீதும் குறித்த குழுவினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி கலைஞர்கள் தமது கைத்தொலைபேசிகள் மற்றும் கமராக்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாதாரணப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...