சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த போது இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
சீமெந்து மூடையின் விலை 1275 ரூபாவா எனவும், கடை உரிமையாளர்கள் சீமெந்து மூட்டை 1400 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews