13 7
இந்தியாசெய்திகள்

விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி

Share

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உரையாடலின் போது, ​​விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அன்று கரூரில் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த மறுநாள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபா 20 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 2 இலட்சமும் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்தார்.

அது மாத்திரமன்றி, தவெக தலைவர் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமும் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது விஜய் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...