மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இராஜதந்திர ரீதியிலான சமரசத்தை ஏற்படுத்த துருக்கி மற்றும் முக்கிய அரபு வளைகுடா நாடுகள் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.
தற்போதைய பதற்றமான சூழல் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள முக்கிய அவதானிப்புகள் வருமாறு அமெரிக்காவின் அழுத்தங்களைச் சமாளிக்க ஈரான் கையாண்ட ஆரம்பக்கால யுக்திகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும், அவை தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ‘போர் மிரட்டல்’ பாணியிலான பேச்சுகளும், அதற்குப் பதிலடியாக வரும் ஈரானின் செய்திகளும் பிராந்தியத்தில் நிலவும் இராஜதந்திர வாய்ப்புகளைச் சிதைப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சியின் (Araghchi) தற்போதைய கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் ஈரானின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
துருக்கியும் அரபு நாடுகளும் இந்தப் பதற்றத்தைத் தணிக்க இரண்டு பிரதான இலக்குகளுடன் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்காவைச் சமாதானப்படுத்தி நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்தல். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான புதிய இராஜதந்திர உறவில் ஈரானுக்கு ஒரு கௌரவமான வாய்ப்பை வழங்குவதற்கு ஏனைய பிராந்திய நாடுகளைச் சம்மதிக்க வைத்தல்.
இறுதியில் இந்தப் பதற்றத்தைத் தணிப்பது என்பது ஈரான் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முன்வருவதைப் பொறுத்தே அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மத்தியஸ்த நாடுகளின் முயற்சிகள் ஒரு தற்காலிகத் தீர்வைத் தரக்கூடும் என்றாலும், நீண்டகால அமைதிக்கு இரு நாடுகளும் இராஜதந்திரப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.