NPC 850x460 1
செய்திகள்இலங்கை

வடக்கு செயலாளர்களிடையே இடமாற்றம்!!

Share

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த இளங்கோவன் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பேரவைச் செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பதில் பிரதம செயலாளராக பணியாற்றி வந்த பற்றிக் றஞ்சன் உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் செயலாளராக தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...