அமெரிக்காவில் மொன்ட்டானா மாநிலத்தில் ரயில் விபத்து! – மூவர் உயிரிழப்பு!

thumb

அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக் என்ற புகைவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடைபெறும் பொழுது புகையிரதத்தி்ல் 147 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்துள்ளார்கள்.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version