தென்னாபிரிக்க பயணிகளுக்கு தடை! – பிரசன்ன ரணதுங்க

f01c0efb f43dd4c8 tourism

ஒமிக்ரோன் புதிய பிறழ்வால் ஆறு தென்னாபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய ஆறு நாடுகளைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஆறு நாடுகளை தவிர ஏனைய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிற்குள் வர எந்த தடையும் இல்லை.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் வரவில்லை என்பதை சுட்டிகாட்டிய அவர், இந் நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வந்துள்ளார்களா? இல்லையா? என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும். உரிய திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டால் அதற்கேற்ப சுகாதாரத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காடினார்.

இனி வரும் நாட்களில் விசா வழங்கும் போது சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்பதையும் வழியுறுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version