jhgffrrtuiyioui
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொது இடத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய மூவருக்கு தண்டம்: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி!

Share

புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில் மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மொத்தம் 7,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட சந்தை பகுதியில், பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்பிய மூவர் மீது பொது சுகாதாரப் பரிசோதகரால் (PHI) இன்று (வெள்ளிக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொதுமக்கள் இருவருமாவர்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மீன் வியாபாரிக்கு 5,000 ரூபா ஏனைய இருவருக்கு தலா 1,000 ரூபா வீதம் 2,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகளில் ஈடுபடும் பட்சத்தில், அபராதத்துடன் சேர்த்து குறிப்பிட்ட காலத்திற்கு சமூக சேவை (Social Service) செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் தூய்மையைப் பேணுமாறும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் நடக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...