jhgffrrtuiyioui
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொது இடத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய மூவருக்கு தண்டம்: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி!

Share

புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில் மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மொத்தம் 7,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட சந்தை பகுதியில், பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்பிய மூவர் மீது பொது சுகாதாரப் பரிசோதகரால் (PHI) இன்று (வெள்ளிக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரும், பொதுமக்கள் இருவருமாவர்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு மீன் வியாபாரிக்கு 5,000 ரூபா ஏனைய இருவருக்கு தலா 1,000 ரூபா வீதம் 2,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகளில் ஈடுபடும் பட்சத்தில், அபராதத்துடன் சேர்த்து குறிப்பிட்ட காலத்திற்கு சமூக சேவை (Social Service) செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் தூய்மையைப் பேணுமாறும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் நடக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...