IMG 20220316 102835
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் காரில் பயணித்த மூவர் கஞ்சாவுடன் சிக்கினர்!

Share

வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சொகுசு காரை இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் காரும் கைப்பற்றப்பட்டது.

அதேவேளை, காரில் பயணித்த குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்த 44 ,41, 39 வயதுகளையுடைய பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 12 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...