as
செய்திகள்இலங்கை

என்னை மீட்டவர்கள் இளைஞர் ,யுவதிகளே!! – சந்திரகாந்தன் பெருமிதம்!!

Share

ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி ஒன்றுக்கு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர் ,

வடக்கு கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு எனக்கே கிடைத்தது.

அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அதிகூடிய வாக்கினை அளித்து என்னை சிறையிலிருந்து மீட்டு எடுத்தனர்.

நாங்கள் தற்சமயம் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. நமது கட்சி பொதுஜன பெரமுன உடன் கூட்டு வைத்துள்ளது.அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.

ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா காரணமாக கடுமையான நெருக்கடிகள் மத்தியிலும் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். என்றார்.




Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...