” அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாமும் அரச பங்காளிகள்தான். வெற்றியில் எமக்கும் பங்குண்டு. எனவே, அரசின் பயணத்தை தடுப்பதற்கும், காலை வாருவதற்கும் நாம் தயாரில்லை.
அரசு தவறான திசையில் பயணிக்குமானால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருக்கின்றது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment