1581789514394
செய்திகள்உலகம்

உயர் பதவிகளில் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை – சர்வதேச நாணய நிதியம்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

அதாவது, அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் என்பவரே சர்வதேச நாணய நிதியத்துக்கு முதலாவது பெண்துணை நிர்வாக இயக்குநராக நியமனம் பெற்றுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் இந்திய அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி  வரும்  இவர் ஐ.எம்.எச் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பேரினப் பொருளியல் ஆராய்ச்சி முறைகளைக் முதன்மைப்படுத்திய இவர், தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பண்நாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். அத்தோடு, கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து குறித்த  தலைமை பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட உள்ளமை பாராட்டுக்குரியது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...