1581789514394
செய்திகள்உலகம்

உயர் பதவிகளில் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை – சர்வதேச நாணய நிதியம்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

அதாவது, அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் என்பவரே சர்வதேச நாணய நிதியத்துக்கு முதலாவது பெண்துணை நிர்வாக இயக்குநராக நியமனம் பெற்றுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் இந்திய அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி  வரும்  இவர் ஐ.எம்.எச் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பேரினப் பொருளியல் ஆராய்ச்சி முறைகளைக் முதன்மைப்படுத்திய இவர், தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பண்நாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். அத்தோடு, கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து குறித்த  தலைமை பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட உள்ளமை பாராட்டுக்குரியது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...