அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவேயில்லை! – அரசு திட்டவட்டம்

Share

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது. அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதிகளிடம் சிக்கிய மக்களை மீட்கவே நீதியான முறையில் போர் முன்னெடுக்கப்பட்டது. மாறாக இனப்படுகொலை இடம்பெற்றது என்றெல்லாம் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். வெளிநாடுகளில் சம்பளம் வாங்கும் தரப்பொன்றே அவ்வாறான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் டயஸ்போராக்கள்தான் இலங்கைக்கு எதிராகப் பிரசாரம் செய்கின்றனர் எனக் கூறப்படுவது தவறு. தமிழ் டயஸ்போராக்களில் புலிகளின் கருத்தியலுடன் இருக்கும் சிறு தரப்பொன்றே இவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுகின்றது. அவர்கள் வீதியில் போராடுவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. இந்நிலைமையும் தற்போது மாறி வருகின்றது.

ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார். அது சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புகின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...