எமது அரசில் சுரண்டி பிழைப்பவர்களுக்கு இடமில்லை! – சஜித்

Sajith Premadasa.jpg

“நாட்டில் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயம் வெற்றிபெறும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களை பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று எல்லா வழிகளிலும் மக்களை வதைக்கின்றனர். சந்தைக்கு சென்றால், பொருட்களின் விலைகள் உச்சம். இதயம், வயிறு என எல்லாம் எரிகின்றது.வாழ்வதற்கு உரிய வழி இல்லை.

எமது ஆட்சியின் கீழ் சிறந்த நிலைமை உருவாக்குவோம். ‘டீல்’ அரசியலுக்கு இடமில்லை. சுரண்டி பிழைப்பவர்களுக்கும் வாய்ப்பு இல்லை. மக்களுக்கான அரசியலே நடத்தப்படும். தேசியக் கொள்கையை முன்னிறுத்தி நடவடிக்கைகள் இடம்பெறும். தனிநபர் செல்வாக்குக்கு இடமில்லை. – என்றும் சஜித் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version