WhatsApp Image 2022 03 12 at 12.01.49 PM
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய அரசுக்கு வாய்ப்பே இல்லை ! – மஹிந்த திட்டவட்டம்

Share

தேசிய அரசு அமைவது குறித்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசு அமைப்பது பற்றி செய்தி அடிபடுவது குறித்து கேள்வி எழுந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர்,

“தேசிய அரசொன்று அமையலாம் என்பது வெறும் பேச்சுதான். இருக்கும் அரசு பலமானதாக இருக்கின்றதே. இப்படியொன்று நடக்கின்றதா என்பது எனக்குத் தெரியாதே? சிலவேளை ரணிலுக்கு மனதில் ஆசை (பிரதமராக வேண்டும் என) இருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” – என்றார்.

அரசு இப்போது முன்னாள் பிரதமர் ரணிலிடம்தான் ஆலோசனைகளைக் கேட்பதாக சில செய்திகள் கூறுகின்றனவே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

“வங்கியொன்றைக் கொள்ளையிட வேண்டுமானால் ரணிலிடம் ஆலோசனை கேட்கலாம். அரசியல் ஆலோசனைகளை அவரிடம் கேட்குமளவுக்கு அரசு இன்னும் தாழ்ந்துவிடவில்லை” – என்றார்.

WhatsApp Image 2022 03 12 at 12.01.49 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...