1760884555 Paris Louvre Museum Sri Lanka 6
செய்திகள்உலகம்

உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

Share

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக, அருங்காட்சியகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அருங்காட்சியகம் இன்று (அக்டோபர் 19) காலை திறக்கப்பட்டபோது இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், என்ன திருடப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

232 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகம் 1793 இல் திறக்கப்பட்டது. இதில் 16 ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உட்படப் பல உலகப் புகழ்பெற்ற பழங்காலக் கலைப்பொருட்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும், 8.7 மில்லியன் மக்கள் லூவ்ரே அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர், இது அந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவானோர் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...