child
செய்திகள்இலங்கை

சிறுவன் மீது முறிந்து விழுந்த மரம்!

Share

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு இயந்திரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தைத் தரித்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...