child
செய்திகள்இலங்கை

சிறுவன் மீது முறிந்து விழுந்த மரம்!

Share

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு இயந்திரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தைத் தரித்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...