child
செய்திகள்இலங்கை

சிறுவன் மீது முறிந்து விழுந்த மரம்!

Share

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு இயந்திரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தைத் தரித்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...