ஜகத் குமார
செய்திகள்அரசியல்இலங்கை

“எதிரணியின் போராட்டத்தால் அரசுக்குப் பாதிப்பே இல்லை”

Share

“கொழும்பில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகளால் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயரமடைந்துள்ள போதிலும், நல்லாட்சி அரசுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது எமது குழுவினரும் இதுபோன்ற இலட்சக்கணக்கான போராட்டங்களை நடத்தினர். இதனால் எதிர்க்கட்சிகள் பிழைப்பதே தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை .

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பலர் இருக்கின்றனர். அரசு வழங்கும் வரிச்சலுகையைப் பயன்படுத்தி அவர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அரசிடம் இருந்து வரிச்சலுகை பெற்று, அதன் பலனை மக்களுக்கு வழங்காத இந்தத் தொழிலதிபர்கள், மக்களுக்குப் பூச்சாண்டி காட்ட முயல்கின்றனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...