s 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மேல் வெடிவைத்து நகை திருடிய கொள்ளையர்கள்!!

Share

பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் 2.50ற்கு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து உள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நகைக்கடையில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டனர்.

மிகவும் குறைந்த அளவு நேரத்தில் சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர் .இது தொடர்பில் கடையில் பணிபுரியும் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

தாங்கள் மூன்று பேர் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகவும் நான்கு வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் வந்த இருவரும் மேல் வெடி வைத்து அசைய வேண்டாம் என்று கூறினார்கள். அங்கிருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்றார்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடவில்லை. சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொரளை பொலிஸ் நிலையம், கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு என்பன இணைந்து ஆரம்பித்துள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...