s 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மேல் வெடிவைத்து நகை திருடிய கொள்ளையர்கள்!!

Share

பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் 2.50ற்கு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து உள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நகைக்கடையில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டனர்.

மிகவும் குறைந்த அளவு நேரத்தில் சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர் .இது தொடர்பில் கடையில் பணிபுரியும் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

தாங்கள் மூன்று பேர் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகவும் நான்கு வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் வந்த இருவரும் மேல் வெடி வைத்து அசைய வேண்டாம் என்று கூறினார்கள். அங்கிருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்றார்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடவில்லை. சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொரளை பொலிஸ் நிலையம், கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு என்பன இணைந்து ஆரம்பித்துள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...