130160
செய்திகள்உலகம்

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

Share

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்பு சாசனம் இனி நடைமுறையில் இருக்காது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கினியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா,

நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை. நாட்டில் தற்போது பதவியிலுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி நீக்கப்படுவார்கள். எமது ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த ராணுவப் புரட்சியை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், துப்பாக்கிமுனையில் உருவாக்கப்படும் ஆட்சியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...