130160
செய்திகள்உலகம்

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

Share

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்பு சாசனம் இனி நடைமுறையில் இருக்காது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கினியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா,

நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை. நாட்டில் தற்போது பதவியிலுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி நீக்கப்படுவார்கள். எமது ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த ராணுவப் புரட்சியை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், துப்பாக்கிமுனையில் உருவாக்கப்படும் ஆட்சியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...