130160
செய்திகள்உலகம்

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

Share

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்பு சாசனம் இனி நடைமுறையில் இருக்காது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கினியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா,

நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை. நாட்டில் தற்போது பதவியிலுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி நீக்கப்படுவார்கள். எமது ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த ராணுவப் புரட்சியை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், துப்பாக்கிமுனையில் உருவாக்கப்படும் ஆட்சியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...