inv
செய்திகள்இலங்கை

பன்டோரா விவகாரம் – வருமான வரித் திணைக்கள விசாரணை ஆரம்பம்

Share

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பன்டோரா ஆவணம் தொடர்பில் தற்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. ஆவனத்தில் பெயரிடப்பட்டுள்ள தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவியான நிருபமா ராஜபக்சவிடமும் விசாரணை இடம்பெறவுள்ளது.

விசாரணைகளை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...