GA
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதோர் அதிகம்

Share

60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை முதியோர் கழகங்கள் மற்றும் முதியோர் அமைப்புக்கள் ஊக்குவித்து அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தம்மையும் தம் குடும்பத்தாரையும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டு வறுமையில் காணப்படும் எமது மாவட்டத்தில் தொற்றுக்களின் பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...