இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வரை, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்த நிலையில், கடந்த 4 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளில்
மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.