Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

Share

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்காக இராணுவத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (அக் 23) நடைபெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றிய முக்கிய அம்சங்கள்,
“யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.”

போருக்குப் பிந்தைய பரவல்: போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியது. “இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.”

இராணுவத்தின் தற்போதைய பங்கு: “இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது. விடுதலைப் புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.”

காவல்துறையின் அலட்சியம்: போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல் நிலையங்கள் ஏற்க மறுக்கின்றன. எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்துத் தேடிப்பார்க்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு அவசியம்: காவல்துறை, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயங்களை அந்தந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்குத் தாம் பொறுப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும். வடகிழக்குடன் தொடர்பல்லாத தரப்பினரால் அங்குள்ள பிரச்சினைகளை ஒருபோதும் தீரக்க முடியாது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு நிபந்தனை: “அரசாங்கம் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு எங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும். எனினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின் இந்தச் செயற்பாட்டிலிருந்து இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும்.” நிபுணத்துவம் பெற்றவர்களை மட்டும் இதில் ஈடுபடுத்தினால் மாத்திரமே ஒழிப்பு சாத்தியப்படும். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
25 68fc4bb76f874
இலங்கைசெய்திகள்

பேருவளையில் வெள்ளை வேனில் கடத்தல்: முகமூடி அணிந்த குழுவினர் கைது செய்யப்படலாம்!

பேருவளையில் (Beruwala) வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின்...

25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச...

25 68fc8c23901e1
செய்திகள்இலங்கை

கரூர் சோகச் சம்பவம்: உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்!

கரூர் சம்பவம் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை...

Ilankumaran
செய்திகள்இலங்கை

யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத்...