DSC07403
செய்திகள்அரசியல்இலங்கை

“வடக்கு, கிழக்கு, மலையகம் இணைவது காலத்தின் கட்டாயம்”

Share

“வடக்கு, கிழக்கு, மலையகம் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.”

-இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக மலையக மக்கள் முன்னணி எந்தப் போராட்டத்தையும் வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் இணைந்து நடத்தத் தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் கையெழுத்து வேட்டை இன்று நுவரெலியாவில் நடைபெற்றது

நுவரெலியா பிரதான நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்த கருத்துத் தெரிவித்த இராதாகிருஷ்ணன் எம்.பி.,

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த நாட்டில் பலரும் கருதுகின்றார்கள்.

ஆனால், அந்தச் சட்டமானது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தகின்ற ஒரு சட்டமாகும்.

இந்தச் சட்டத்தின் மூலமாக எந்தவொரு நபரையும் கைதுசெய்கின்ற அதிகாரம் பொலிஸாரிடம் இருக்கின்றது.

எனவே, அனைத்து மக்களும் இணைந்து இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்.

இந்தச் சட்டத்தின் மூலமாக அதிக பாதிப்பைச் சந்தித்த மலையகக் கட்சி என்றால் அது மலையக மக்கள் முன்னணி என்பதை அனைவரும் அறிவார்கள்.

எங்களுடைய கட்சியின் தலைவர் இந்தச் சட்டத்தின் மூலமாகக் கைதுசெய்யப்பட்டார். அவர் துன்புறுத்தப்பட்டார்.

அதேபோல் எங்களுடைய கட்சியின் விசுவாசிகள் கைதுசெய்யப்பட்டு எந்தக் காரணமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டனர்.

எனவே, போர் வடக்கு, கிழக்கிலே நடந்தாலும் மலையகப் பகுதியில் இருக்கின்ற இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இந்தச் சட்டம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மலையகத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்றபோது வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளைப் பாடசாலைகளில் செய்திருக்கின்றேன். அதன்போது எனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

அதற்குக் காரணம், நாங்கள் இரண்டு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அப்படிச் செயற்பட்டால் மாத்திரமே வடக்கு, கிழக்கு மக்களும் மலையக மக்களும் எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் பூர்த்திசெய்து கொள்ள முடியும். அதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் நன்குணர்ந்து செயற்படுகின்றது. இந்த நிலைமை தொடர வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...