Parliament SL 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று !

Share

2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு நிலவிவருகின்றது. நாட வேண்டுமென ஒரு தரப்பும், நாடக்கூடாதென மற்றுமொரு தரப்பும் வலியுறுத்திவருகின்றன.

எனவே, இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இன்று முக்கியத்துவமிக்க பத்திரங்கள் இருப்பதால் அடுத்த கூட்டத்துக்கே இவர்கள் அழைக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது.2022 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...