நாட்டில் தற்போது கையிருப்பில் காணப்படும் எரிபொருள் 20 நாட்களுக்கு போதுமானது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் கம்பனியின் செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகள் இரண்டு தற்போது நாட்டை வந்தடைந்துள்ளன. ஒரு சில நாட்களில் எரிபொருளுக்கான கோரிக்கை வழங்கப்படும்.
நாட்டில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடரும் – என்றார்.
#SrilankaNews
Leave a comment