6 23
இந்தியாசெய்திகள்

தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ள மத்திய அரசாங்கம் : முதல்வர் கண்டனம்

Share

தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ள மத்திய அரசாங்கம் : முதல்வர் கண்டனம்

இந்திய மத்திய அரசாங்கத்தின் பாதீடு, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin)விமர்சித்துள்ளார்.

அத்துடன், மத்திய அரசாங்கத்தின் பாதீடு, ஏதோ கூட்டணி ஒப்பந்தம் போன்று உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீட்டை, இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பாதீட்டில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பாதீட்டில் தமிழ்நாடு என்ற சொல்லே இடம்பெறவில்லை.

முன்னதாக 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ தொடருந்து திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

எனினும் அது தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை. மதுரை, கோவை மெட்ரோ தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

இதன்படி, மத்திய அரசாங்கத்தின் பாதீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வழமையாக தமது பாதீட்டு உரையில் திருக்குறள் மற்றும் புறநானூறு போன்றவற்றை மேற்கோள் காட்டும் நிர்மலா சீத்தாராமன், இந்த பாதீட்டில் அதை எதனையும் தொடவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதேவேளை இந்திய பாதீட்டின்படி, தங்கம், வெள்ளி மற்றும் கைடக்கத் தொலைபேசிகளின் விலையில் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...