WhatsApp Image 2021 12 11 at 7.10.03 PM
செய்திகள்அரசியல்இலங்கை

இரவோடிரவாக வந்து குந்திய புத்தர் – தாண்டியடியில் சம்பவம்!!

Share

சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான பிக்குகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனையடுத்து பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5மணி முதல் குறித்த இடத்தில் ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் செயற்பாட்டைக்கண்டித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.

குறித்த இடத்தில் இருந்து சிலை அகற்றப்படும் வரை தாம் இங்கிருந்து நகரப்போவதில்லையென தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் பிரசன்னமாகியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...