சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான பிக்குகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இதனையடுத்து பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5மணி முதல் குறித்த இடத்தில் ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் செயற்பாட்டைக்கண்டித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.
குறித்த இடத்தில் இருந்து சிலை அகற்றப்படும் வரை தாம் இங்கிருந்து நகரப்போவதில்லையென தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் பிரசன்னமாகியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment