WhatsApp Image 2021 12 11 at 7.10.03 PM
செய்திகள்அரசியல்இலங்கை

இரவோடிரவாக வந்து குந்திய புத்தர் – தாண்டியடியில் சம்பவம்!!

Share

சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான பிக்குகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனையடுத்து பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5மணி முதல் குறித்த இடத்தில் ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் செயற்பாட்டைக்கண்டித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.

குறித்த இடத்தில் இருந்து சிலை அகற்றப்படும் வரை தாம் இங்கிருந்து நகரப்போவதில்லையென தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் பிரசன்னமாகியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...