செய்திகள்இந்தியா

பிரபாகரனின் படத்தை வைத்திருந்த இளைஞனுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!

Share
download 93 300x150 1
Share

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரை சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

செல்வமணி என்ற குறித்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 அரை வருடங்களாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வரும் இவர் அண்மையில் மாவீரர் நாளை கொண்டாடியதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த நபர் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினரின் புகைப்படம் வைத்திருந்ததாக கூறி 6 நாட்களுக்கு மேலாக விசாரணைகள் நடாத்தி அவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத வகையில் அவருக்கு தடை விதித்துள்ளது சிங்கப்பூர் அரசாங்கம்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...