mali
செய்திகள்உலகம்

பேருந்திற்குத் தீ வைத்த பயங்கரவாதிகள்-33 பேர் உடல் கருகிச் சாவு

Share

மாலியில் பேருந்தொன்று தீ வைத்து எரிக்கப்பட்டதில், 33 பேர் உடல் கருகிச் சாவடைந்துள்ளனர் .

பயங்கரவாதிகளால் குறித்த பேருந்துக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே 33 பேரும் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

மாலியின் சாங்கோ ஹெரி என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது சென்று கொண்டிருந்த பேருந்தை மறித்த பயங்கரவாதிகள் சிலர், பேருந்தின் சாரதியைக் கொலை செய்துவிட்டு, பேருந்தின் கதவுகளை மூடி அதற்குத் தீ வைத்துள்ளனர்.

இதன்போது தப்பியோட முயற்சித்தவர்கள், பேருந்தின் கதவுகளைப் பயங்கரவாதிகள் மூடியதால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்திருந்த நிலையில், 7 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தபொழுதிலும், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...