mali
செய்திகள்உலகம்

பேருந்திற்குத் தீ வைத்த பயங்கரவாதிகள்-33 பேர் உடல் கருகிச் சாவு

Share

மாலியில் பேருந்தொன்று தீ வைத்து எரிக்கப்பட்டதில், 33 பேர் உடல் கருகிச் சாவடைந்துள்ளனர் .

பயங்கரவாதிகளால் குறித்த பேருந்துக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே 33 பேரும் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

மாலியின் சாங்கோ ஹெரி என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது சென்று கொண்டிருந்த பேருந்தை மறித்த பயங்கரவாதிகள் சிலர், பேருந்தின் சாரதியைக் கொலை செய்துவிட்டு, பேருந்தின் கதவுகளை மூடி அதற்குத் தீ வைத்துள்ளனர்.

இதன்போது தப்பியோட முயற்சித்தவர்கள், பேருந்தின் கதவுகளைப் பயங்கரவாதிகள் மூடியதால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்திருந்த நிலையில், 7 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தபொழுதிலும், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...