20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

Share

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம் எனத் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாளாக’ (கரி நாள்) அனுஷ்டிக்கும் போராட்டங்களுக்கு ரெலோ கட்சி முழுமையான ஆதரவை வழங்குகிறது.

இலங்கை சுதந்திரமடைந்து பல தசாப்தங்கள் கடந்தாலும், தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. சிங்கள மக்களுக்கே அந்தச் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஈழத் தமிழர்கள் இன்றும் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், தமிழ் மக்கள் இன்னும் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...