20 13
இந்தியாசெய்திகள்

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

Share

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) வீட்டில் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணை கிழிக்கப்பட்டதில் காவலாளிக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அழைப்பாணை ஒட்டி சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வந்த நபரொருவர் அதனைக் கிழித்துள்ளார்.

நடிகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சீமான் முன்னிலையாகாததால் பொலிஸாரால் இந்த அழைப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை (28) காலை 11 மணிக்கு வலசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பொலிஸார் அந்த அழைப்பாணையில் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அழைப்பணையை கிழித்த சீமானின் காவலாளிக்கும் பொலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி பொலிஸாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...