20 13
இந்தியாசெய்திகள்

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

Share

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) வீட்டில் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணை கிழிக்கப்பட்டதில் காவலாளிக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அழைப்பாணை ஒட்டி சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வந்த நபரொருவர் அதனைக் கிழித்துள்ளார்.

நடிகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சீமான் முன்னிலையாகாததால் பொலிஸாரால் இந்த அழைப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை (28) காலை 11 மணிக்கு வலசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பொலிஸார் அந்த அழைப்பாணையில் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அழைப்பணையை கிழித்த சீமானின் காவலாளிக்கும் பொலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி பொலிஸாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...