இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

25 683d2e2c6c0e6

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது” என அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க நினைத்தால், அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், பிரபாகரனுக்குப் பின்னால் தமிழ் மக்களை ஒன்றிணைக்கக் கூடிய தலைவர் ஒருவரை இனம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஈழத் தமிழர்கள் ஒரு தலைமையில் ஒரு தேசமாக ஒன்றுபட்டுத் தமிழர் பிரச்சினையைக் கையாள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஈழத் தமிழர்களுடைய அரசியல் வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்ற கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட தாக்கம்: புலிகளின் தலைவருடைய போராட்டம்தான் தன்னை பொது வாழ்வியலுக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version