download 1
செய்திகள்உலகம்

உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள் இட்ட கட்டளை!!

Share

உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் குறித்த சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளதாக தலிபான் ஊடகப்பிரதானி கருத்து வெளியிட்டுள்ளார்.

கபேக்கள் மற்றும் கடைகளில் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவின் படத்தை சித்தரித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், “ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்” என எழுதப்பட்டிருக்கிறது.

இது ஷரியத் சட்டத்தை பின்பற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரங்களை அதிகளவில் குறைத்துள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பாக சாலையில் நீண்ட தூரம் செல்லும் பெண்கள் ஒரு ஆண் உறவினர் துணையுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், வாகனங்களில் இசையை ஒலிப்பதையும் தடை செய்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
cardinal malcolm ranjith
இலங்கைசெய்திகள்

இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’: கலாசார விழுமியங்கள் சிதைவடையும் – கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!

இலங்கைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்துக்...

sajith 240423
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் பிரேமதாசவுக்கு அனுரகுமார திசாநாயக்க நன்றி: “மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர், அதனால்தான் சஜித் செல்லவில்லை!

எதிர்க்கட்சிகளின் சில குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணி நடத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார...

1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...