5760
செய்திகள்உலகம்

சீனா ஒலிம்பிக்கில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம்!!

Share

சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதவேளை தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகின்றமையால், இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது.

ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் .

சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...