26 696525bc0a02f
செய்திகள்உலகம்

ஆயுதமில்லா போர்: தைவான் மீது சீனா அறிவாற்றல் போர் தொடுப்பதாக எச்சரிக்கை!

Share

சீனா தங்களுக்கு எதிராக அறிவாற்றல் போர் என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக தைவான் நாட்டின் உயர்மட்ட உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனா நூற்றுக்கணக்கான போலி செய்தி இணையதளங்களையும் மற்றும் தானியங்கி கணினி மென்பொருள்களான பாட் (Bot) நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை தைவான் அரசுக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த போரானது தைவானுக்கு எதிராக நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் போர் அல்லாமல் மாறாக மக்களின் சிந்தனை, உணர்ச்சிகள் மற்றும் மனநிலையைக் குறிவைத்து நடத்தப்படும் போர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தைவானின் தேசிய பாதுகாப்பு பணியகம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2024-2025 காலகட்டத்தில் சீனாவிடமிருந்து வரும் இத்தகைய தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

குறிப்பாக, முகப்புத்தகம், டிக்டாக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் விஷமத்தனமான கருத்துகள் பரப்பப்படுகின்றன.

கூர்மையான ஆயுதத்தால் காவல்துறையை தாக்க வந்தவர் சுட்டுக்கொலைபோலியாக காணொளி
AI மற்றும் டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பேசாத விஷயங்களைப் பேசியது போல போலியாக காணொளிகளை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
மக்களின் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்றவாறு மனமாற்றத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆட்டோ மேட்டிக்காக அனுப்புகின்றனர்.

இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள தைவான் அரசு முழு அரசாங்க அணுகுமுறை என்ற திட்டத்தைச் செயல்படுத்துகின்றது.

உடனுக்குடன் போலிச் செய்திகளைக் கண்டறிந்து அவற்றைத் தெளிவுபடுத்துவதுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...