டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மோதின. உலகெங்கும் உள்ள ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 77 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.
176 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 61 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியை ஈட்டியதுடன், தொடரில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

